Wednesday, August 22, 2007

அன்றுதான் யாழ்மக்களும் இடம்பெயர்ந்தார்கள்

அன்றும் வழமைபோல் தூரத்தில் கேட்கும் ஷெல் சத்தத்துடன் எழும்பினேன். கடந்த சில காலமாக இது எங்களுக்கு பழகிவிட்டதொன்று , தூரத்த ஷெல் சத்தம் கேட்கும் ஆனால் நாங்கள் இதை பற்றி கவலைபடுவதில்லை. அன்றும் வழமைபோல் அம்மா "தம்பி நேரம் போகமுன்னம் குளிச்சிட்டு வெளிக்கிடப்பு ஸ்கூலுக்கு நேரம் போகப்போகுது." இப்படித்தான் தினம் அம்மா கத்துவா ஆனால் நான் வழமைபோல் ஆறுதலாகதான் கதிரைவிட்டு எழும்பி குளித்துவிட்டு பள்ளிகூடம் செனறேன்.

வழமைபோல் பள்ளிகூடம் நிரம்பி இருக்கவில்லை, ஏன் என்றால் சிலர் யாழ்பாண்ம் ஆமி்டடை பிடிபட்டுபோகும் என்று ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டார்கள். ஆகையால் குறைந்த மாணவர்களுடன் பள்ளிகூடங்கள் திறந்திருக்காமல் மதியம் போல் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நானும் வழமைபோல் உடனடியாக வராமல் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீடு வந்ததால் கோபத்தில் நின்ற அம்மாவிடமி்ருந்து அடியும் விழந்தது. இதுஎல்லாம் எனககு பழகிவிட்டதொன்று. ஆனால் அன்று இரவு எனக்குமட்டுமல்ல யாழ் மக்களுகே ஒர் புதிய இரவு.

மாலை 7மணியளவில் லாவுட் ஸ்பிகரில் "யாழ் மக்களுக்கோர் அறிவித்தல், ஆமி் கிட்ட வந்திட்டான், தப்பி ஒடவும்". இது கேட்ட 5நிமி்டத்தில் KKஸ் றோட் மக்களால் நிரம்பிவழிந்தது. நாங்களும் சாப்பிட்டதை அப்படி விட்டு விட்டு சுட்கேஸ்ஸில் உடுப்புகளை எடுத்துக்ககொன்று மாமா மற்றும் பெரியாப்பா குடும்பத்துடன் KKஸ் றோட்ல் இறங்கினம். எல்லோரும் சைக்கிளை உருட்டியபடி நடந்து போய்க்கொண்டிருந்தர்கள்.


தொடரும்....

(மன்னிக்கவும் இதுதான் முதல் தடவையாக எழுதுகிறன், அதனால் என்னால் இதை உடனடியக முடியவில்லை. தமி்ழில் எழுதுவதற்கு ஏதாவது இலகு வழி இருந்தால் தெரிவிக்கவும்.)

நன்றி
ஆறு

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home