Monday, November 26, 2007

இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா? - யாழ்.கம்ல் நடந்துகொண்டிருக்கும் விவாதம்

---------------------------------------------------------------------------------------------------------

இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா?
Options
கறுப்பி
Yesterday, 12:58 PM
Post #1


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 8,523
Joined: 11-January 06
From: லண்டன்
Member No.: 2,070



இலங்கை - இந்தியாவை மிரட்டுகிறதா? இந்தியா இலங்கையை மிரட்டுகிறதா?

[25 - November - 2007]
-கலைஞன்-
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய போதனையும் செவிடர் காதில் ஊதிய சங்காகவேயுள்ளது.

முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு நிகழ்வில் உரையாற்றுவதற்காக இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல உயர்மட்டத்தினருடன் அவசர சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

சிதம்பரத்தின் சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதும் ஜனாதிபதி, பிரதமர் ஜே.வி.பி. தலைவருடனான சந்திப்புகள் குறித்த விபரங்கள் எதுவும் அரச தரப்பினரால் வெளியிடப்படாது மூடி மறைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பாக சிதம்பரம் சில சூடான கருத்துகளை வெளியிட்டதே இதற்குக் காரணமெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த சிதம்பரம் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதனால் ஏற்படப் போகும் விளைவுகள் தொடர்பாக எச்சரித்ததாகவும் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ததன் மூலம் விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளிலிருந்து ஒதுங்குவதற்கு இலங்கையரசு காரணமாகிவிட்டதாக குற்றம் சாட்டியதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் தமிழ்ச் செல்வன் படுகொலை தொடர்பாக அரச ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பாக தமது விசனத்தை சிதம்பரம் வெளியிட்டாராம்.

இதேவேளை இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு தினத்தில் உரையாற்றிய சிதம்பரம் இலங்கை உள்நாட்டுப் போரில் அரசோ விடுதலைப் புலிகளோ வெற்றிபெற முடியாதென சுட்டிக்காட்டியதுடன் தமிழர்களுக்கு உச்சமட்ட அதிகாரத்துடனான தீர்வை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

சிதம்பரத்தின் இதே போதனையைத் தான் உகண்டா தலைநகர் கம்பாலாவில் வைத்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வழங்கினார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போதே பிரணாப் முகர்ஜி ரோஹித போகொல்லாகமவுடன் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக உரையாடியதுடன் சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

தமிழர்களுக்கான உச்சபட்ச அதிகார தீர்வுத்திட்டத்தை இலங்கையரசு உடனடியாக முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய பிரணாப் முகர்ஜி இதன் மூலமே தீவிரவாதப் போக்கற்ற மிதவாத தமிழர்களை நாட்டின் பிரதான நீரோட்டத்தில் இலங்கை அரசால் தக்க வைத்துக் கொள்ள முடியுமெனவும் கூறியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுகளை இலங்கை அரசு எச்சந்தர்ப்பத்திலும் கைவிட்டுவிக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம இவ்வருட இறுதிக்குள் அதிகார பரவலாக்கல் தீர்வுத் திட்டத்தை தமது அரசாங்கம் முன்வைக்குமெனவும் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகள், ஆதரவுடன் இத்தீர்வுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடியதாகவிருக்கும் என்றும் குறிப்பிட்ட ரோஹித போகொல்லாகம இவ்வருட இறுதிக்குள் எப்படியும் தீர்வுத் திட்டத்தை முன்வைப்போமென மீண்டும் உறுதியளித்தார்.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி.யின் ஆதரவின்றியே வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி, அரசாங்கம் பலமாக இருப்பதால் எவ்வித தயக்கமுமின்றி அதிகார பகிர்வு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியுமெனக் கூறியுள்ளார். இது தொடர்பில் இந்தியாவின் அதீத அக்கறையையும் வெளிப்படுத்தினார்.

என்னதான் இந்திய அரசும் உயர் மட்டத் தலைவர்களும் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கையை வற்புறுத்தினாலும் எதுவும் நடக்கப் போவதில்லையென்பது இந்தியாவுக்கு நன்கு தெரிந்தவிடயம். ஆனாலும் இலங்கைப் பிரச்சினையில் தனக்கு அக்கறை இருக்கின்றதென்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதிகாரப் பகிர்வை இடையிடையே வலியுறுத்துவதும் அதற்கு இலங்கையரசும் தலையாட்டுவதும் வாடிக்கையான விடயம்.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்‌ஷ 3 தடவைகளுக்கு மேல் டில்லி வந்து சென்றுள்ளார். அதுதவிர இந்திய உயர்மட்டத் தலைவர்கள் பலர் இலங்கைக்குப் பலதடவை சென்றுள்ளனர். இந்த விஜயங்களின் போதெல்லாம் அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய தலைவர்கள் வலியுறுத்துவதும் இந்த மாதம், அடுத்த மாதம் என இலங்கைத் தலைவர்கள் பூச்சுற்றுவதும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.

இராணுவத் தீர்வில் இலங்கையரசு நம்பிக்கை கொண்டுள்ளதை நன்கு தெரிந்து கொண்டும் இலங்கையரசு போரை நடத்துவதற்கு தேவையான இராணுவ உதவிகளை வழங்கிக் கொண்டும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா வலியுறுத்துவதன் உள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டதாலேயே இலங்கையரசும் அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வென்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது.

இலங்கையரசின் நோக்கம் தெரிந்து கொண்டும் இந்திய அரசு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவது இந்தியாவிலுள்ள ஆறரைக்கோடி தமிழரை ஏமாற்றுவதற்கும் கூட்டணி ஆட்சியின் ஆயுட் காலத்தை பாதுகாக்கவுமே தவிர ஈழத்தமிழர் மீதோ, இலங்கை இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அக்கறையினாலோ அல்ல என்பது இலங்கையரசுக்கு நன்கு தெரியும்.

இலங்கை இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க இந்தியா உண்மையில் விரும்புமாகவிருந்தால் தான் வழங்கி வரும் சகல இராணுவ உதவிகளையும் நிறுத்திவிட்டு, தமிழருக்கான அதிகாரப் பகிர்வு முடிவுத் திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டுமென சிறு அழுத்தம் கொடுத்தாலே போதும் இலங்கையரசு அடிபணிந்துவிடும். ஆனால் இந்தியரசு அதனை விரும்பவில்லை.

தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்பதில் இந்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயற்படுவதாக யாராவது நினைத்தால் அவர்களை விட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
http://www.thinakkural.com/news/2007/11/25...s_page40993.htm



--------------------
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை



tamillinux
Yesterday, 02:31 PM
Post #2


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 269
Joined: 14-September 05
Member No.: 1,555



தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

ரொம்ப தான் லொல்லு கட்டுரை ஆசிரியருக்கு. சிங்கள அரசை சாட்டி கொண்டு ஈழ தமிழரை இந்தியாவும் அதன் வால்பிடிகளும் ஏமாற்றிக் கொண்டு வருகினம்.
இந்திய வல்லரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் சிங்கள அரசை கட்டுப்படுத்தி அடக்கலாம்.

தமிழீழம் உருவானால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வரும் என்பதே இந்திய மத்திய அரசுக்கு பயம்
காரணம் தமிழீழம் ஆசியாவில் ஒரு இஸ்ரேல் போல உருவாகும் என்பதும் இந்திய மத்திய அரசுக்கு தெரியும்.

ஈழத் தமிழர் என்ன இழிச்ச வாயரா இந்த கட்டுரையில் வரும் சீனா பாகிஸ்தான் என்பதை நம்ப????

This post has been edited by tamillinux: Yesterday, 02:34 PM


--------------------
கணனி மனிதனை படைக்கவில்லை
மனிதன் தான் கணனியை படைத்தான்
ஆகவே கணனியை எம்மால்
ஆட்டிப் படைக்க முடியும்.



Justin
Yesterday, 04:36 PM
Post #3


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 272
Joined: 13-April 07
From: USA
Member No.: 3,950



இந்தியாவைத் தலையில் வைத்துக் கொண்டாடும் கூட்டத்தினருக்கு நல்ல பதில் இக்கட்டுரையில் அடங்கியிருக்கிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு நீண்ட காலத்தில் இந்தியாவுக்கே ஆப்பாகும் என்பது மட்டும் உறுதி. தமிழீழம் உருவாகி பல மாறு பட்ட தலைமைகளூடாகப் பயணிக்கும் போது, இந்தியாவுக்கு ஆப்படிக்கும் சக்திகள் கையோங்க வாய்ப்புண்டு. இந்தியா தனது சுய நலன்களுக்காக உருவாக்கி விட்ட வங்கதேசமே இன்று இந்தியாவை எதிரி நாடாகப் பார்க்கிறது என்றால் இந்தியத் துரோகத்துக்குள்ளான தமிழீழம் எப்படி மாறும் என்று சொல்லத் தேவையில்லை.


--------------------
"நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நடுநிலைமை என்று ஒன்று இல்லை"
புதுவை இரத்தின துரை



vettri-vel
Yesterday, 05:13 PM
Post #4


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 469
Joined: 29-November 06
Member No.: 3,209



அரசியல் என்பது அவசரமொழிகளை கொட்டுவதல்ல! இராஜதந்திரம் என்பதும் மேடைபோட்டு செய்யும் கட்சிப் பிரச்சாரம் அல்ல! புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்


--------------------
நூறாண்டு காலம் வாழ்க!!!
எங்கள் தேசியத் தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்கள்



குமாரசாமி
Yesterday, 06:48 PM
Post #5


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 1,691
Joined: 25-November 04
From: கள்ளுக்கொட்டில்.
Member No.: 829



QUOTE(tamillinux @ Nov 25 2007, 03:31 PM)
தற்போதைய அரசியல் கள நிலைவரத்தின்படி பார்த்தால் இலங்கையரசு தான் இந்தியாவை மிரட்டித் தனது காரியத்தைச் சாதித்து வருகிறது. பாகிஸ்தான், சீனாவைக் காட்டி மிரட்டும் இலங்கையரசு கேட்கும் உதவிகளையெல்லாம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இந்திய அரசு உள்ளது. அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு கெஞ்சுகிறது. கெஞ்ச வேண்டிய இலங்கையரசு மிரட்டுகிறது.

ரொம்ப தான் லொல்லு கட்டுரை ஆசிரியருக்கு. சிங்கள அரசை சாட்டி கொண்டு ஈழ தமிழரை இந்தியாவும் அதன் வால்பிடிகளும் ஏமாற்றிக் கொண்டு வருகினம்.
இந்திய வல்லரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் சிங்கள அரசை கட்டுப்படுத்தி அடக்கலாம்.
தமிழீழம் உருவானால் தனது தென்பகுதியை இழக்க வேண்டி வரும் என்பதே இந்திய மத்திய அரசுக்கு பயம்
காரணம் தமிழீழம் ஆசியாவில் ஒரு இஸ்ரேல் போல உருவாகும் என்பதும் இந்திய மத்திய அரசுக்கு தெரியும்.

ஈழத் தமிழர் என்ன இழிச்ச வாயரா இந்த கட்டுரையில் வரும் சீனா பாகிஸ்தான் என்பதை நம்ப????


தம்பி ராசா எங்கையடா இருக்குறாய்???உன்ரை கால்லை விழுந்து கும்புடோணும் போலை கிடக்கு இது தானடா அண்டு தொடக்கம் இருக்கிற பிரச்சனை.பாகிஸ்தானும் சீனாக்காரனும் அமெரிக்க ஐயாமாரும் உந்த பிரச்சனையை வைச்சுத்தானே கனவிசயத்தை சாதிக்கிறாங்கள்


--------------------
கொண்டுவந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன்.



tamillinux
Yesterday, 07:28 PM
Post #6


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 269
Joined: 14-September 05
Member No.: 1,555



இங்கு வரும் எல்லோரும் இந்தியா (பாகிஸ்தான் சீனா அமெரிக்கா) போன்ற நாடுகள் சீறிலங்காவில் நுழையும் என்று பயப்படுகிறது போல எழுதுகினம். அதனால் தான் ஈழத்தமிழருக்கு உதவ பின் வாங்கி நிற்கின்றது என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றது.

நிற்சயமாக அது காரணம் இல்லை. இந்தியாவின் தென்பகுதி தான் இங்குள்ள பிரச்சனை. உதாரணமாக தமிழ் நாடு அங்கே இல்லாவிட்டால் இந்தியா நாம் கேட்காமலேயே தமிழீழத்தை உருவாக்கி தந்து இருக்கும் தற்போது. (பாகிஸ்தானை பிரித்தது போல).

ஆசியாவின் இஸ்ரேல் யாரால் யாருக்கு சாதகமாய் உருவாக்கப்பட போகின்றது?? இதில் யார் முந்த போகின்றனர்?

This post has been edited by tamillinux: Yesterday, 07:30 PM


--------------------
கணனி மனிதனை படைக்கவில்லை
மனிதன் தான் கணனியை படைத்தான்
ஆகவே கணனியை எம்மால்
ஆட்டிப் படைக்க முடியும்.



tamillinux
Yesterday, 07:35 PM
Post #7


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 269
Joined: 14-September 05
Member No.: 1,555



QUOTE (vettri-vel @ Nov 25 2007, 05:13 PM)
அரசியல் என்பது அவசரமொழிகளை கொட்டுவதல்ல! இராஜதந்திரம் என்பதும் மேடைபோட்டு செய்யும் கட்சிப் பிரச்சாரம் அல்ல! புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்


எத்தனை வருடமாக இந்த பழமொழியை சொல்லிக்கொண்டு இருப்பது இன்னும்.
30 வருடங்கள் கடந்துவிட்டன.......... அப்போ இன்னும் ஒரு 30 வருடம். பொறுப்போமா????

This post has been edited by tamillinux: Yesterday, 07:51 PM


--------------------
கணனி மனிதனை படைக்கவில்லை
மனிதன் தான் கணனியை படைத்தான்
ஆகவே கணனியை எம்மால்
ஆட்டிப் படைக்க முடியும்.



Iraivan
Yesterday, 07:43 PM
Post #8


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 1,725
Joined: 17-January 07
From: இறைவன்
Member No.: 3,418



"இலங்கையரசின் நோக்கம் தெரிந்து கொண்டும் இந்திய அரசு அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவது இந்தியாவிலுள்ள ஆறரைக்கோடி தமிழரை ஏமாற்றுவதற்கும் கூட்டணி ஆட்சியின் ஆயுட் காலத்தை பாதுகாக்கவுமே தவிர ஈழத்தமிழர் மீதோஇ இலங்கை இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ அக்கறையினாலோ அல்ல என்பது இலங்கையரசுக்கு நன்கு தெரியும். "

இதூதன் உண்மை. ஆளாளுக்கு ஏமாற்றுபவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் ஏமாற்றுத் தனங்கள் என்றோ தமிழர் தரப்பால் விளங்கிக் கொள்ளப்பட்டுவிட்டது. அதனால் ஏமாற்றமடையும் நிலையில் தமிழர் தரப்பு இல்லை. இதுவே வல்லாதிக்க சக்திகளுக்கு இன்றுள்ள பெரிய பிரச்சனை.


--------------------
இறைவன்



tamillinux
Yesterday, 08:01 PM
Post #9


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 269
Joined: 14-September 05
Member No.: 1,555



உண்மையில் சொல்லப்போனால் மகிந்தவுக்கு தெரியும் இந்த ஆடுபுலியாட்டம். அந்த துணிவில் தான் ஆடுகின்றார்.

இந்தியா இந்தியா என்று ஈழத்தமிழர் துதி பாடினால் கடைசியில் கிடைப்பது யானை உண்ட விளாங்காயும் கிடைக்குமா என்று சந்தேகம் தான்.

ஈழத்தமிழரின் இளம் சந்ததியினர் இந்தியா என்ற மாயையிலிருந்து வெளியே வந்தால் தான் எமக்கு விடிவு என்ற புதிய பாதை கிடைக்கும்.

(நான் சுந்தரத்தின் புதிய பாதை பத்திரிகையை கூறிப்பிடவில்லை) just kidding ok


--------------------
கணனி மனிதனை படைக்கவில்லை
மனிதன் தான் கணனியை படைத்தான்
ஆகவே கணனியை எம்மால்
ஆட்டிப் படைக்க முடியும்.



ragunathan
Yesterday, 10:39 PM
Post #10


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 57
Joined: 29-October 07
Member No.: 4,511



பாக்கிச்தானும், சீனாவும் உதவிக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்தியா உதவுவதாக கூறும் பூச்சாண்டியைக்க் கேற்பதற்கு இங்கொரு கூட்டமே இருக்குப் போல! இதெல்லாம் இந்தியா தனது பெரிய மூக்கை நுழைப்பதற்குப் பாவிக்கும் சாட்டுக்கள். இந்தியா ஆயுதம் குடுக்குது எண்டு இலங்கை பாகிச்தான்காரனும், சீனக்காரனும் குடுக்கும் ஆயுதங்களை வேண்டாம் என்றா விட்டுவிட்டான். இல்லையே, எல்லாரிடமும்தானே வாங்குகிறான். பிறகு ஏன் இந்த இந்தியப் புலுடா? இன்னொரு உதாரணம், ஈரானிடம் இலங்கை போய்விடக்கூடாது எண்டு அமெரிக்கா ஆயுதம் குடுக்குமாம், அதையும் வாங்கிக் கொண்டு இலங்கை ஈரான் போகுமாம், அதற்கு பின் சில மனித உரிமைகள் குற்றச்சாடுகளுக்குப் பிறகு பழயபடி அமெரிக்கா ஆயுதம் குடுக்குமாம்! நல்ல பகிடி!

இந்தியாவின் அழுகிய ராஜதந்திரத்தை வக்காலத்து வாங்குவதற்கு இங்கு நிறையப்பேர் திரியினம் போலக் கிடக்கு. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் என்று கூறிவிட்டு பின் கதவால் இந்தியா ஆயுதம் குடுக்கும், அதை இங்குள்ள சிலர் படித்து விட்டு, "என்னென்டாலும் இந்தியா சும்மா விடாது, தீர்வுத்திட்டத்தை வைக்கச்சொல்லி கேட்டிருக்குது, இனி எங்கட பிரச்சனையெல்லாம் தீர்ந்திரும்" எண்டு ஆறுதல் பெருமூச்சு விடுவினம். இவர்களை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை!

அட நம்ம இந்தியாவாச்சே! இந்தியா இல்லாமல் எப்படி ?



ragunathan
Yesterday, 10:53 PM
Post #11


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 57
Joined: 29-October 07
Member No.: 4,511



இறைவன் !

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையும் யதார்த்தமும்! இதை விளங்கிக் கொள்ளாதவரை இந்தியாவின் திரு விளையாடல்களை நம்பி ஏமாறும் ஒரு கூட்டத்தை காப்பாற்றமுடியாது!

இந்தியா-தடைக்கல்!



vettri-vel
Today, 06:36 AM
Post #12


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 469
Joined: 29-November 06
Member No.: 3,209



QUOTE(vettri-vel @ Nov 25 2007, 05:13 PM)
அரசியல் என்பது அவசரமொழிகளை கொட்டுவதல்ல! இராஜதந்திரம் என்பதும் மேடைபோட்டு செய்யும் கட்சிப் பிரச்சாரம் அல்ல! புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்


QUOTE(tamillinux @ Nov 25 2007, 07:35 PM)
எத்தனை வருடமாக இந்த பழமொழியை சொல்லிக்கொண்டு இருப்பது இன்னும்.
30 வருடங்கள் கடந்துவிட்டன.......... அப்போ இன்னும் ஒரு 30 வருடம். பொறுப்போமா????



ம்! மேற்சொன்ன கருத்துக்கள் ஒன்றும் பழமொழி அல்ல! அரசவியலின் (Statecraft) சில அடிப்படை விதிகளின் சாராம்சம். வல்லரசு, சிற்றரசு என்ற பேதம் இல்லாமல் எல்லா அரசியல் உருவாக்கங்களும் (Political Entities) பாவிக்கும் அரசவியலின் (Statecraft) விதிகள் தான் இவை

என்னை பொறுத்தவரையில், ஈழவிடுதலை போராட்டத்தின் இராஜதந்திர, இராணுவ மற்றும் பாதுகாப்பு வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வேலையை விடுதலை புலிகளிடம் விட்டு விடுவதே நல்லது.

யாழ்களம், இவை சம்பந்தமான முக்கிய விடயங்களை (Sensitive issues) எல்லாம் கலந்துரையாடல் என்ற பெயரில் போட்டு உடைத்து விடுவதற்கான இடமுமல்ல.

இங்கே சில கள நண்பர்கள் விடுதலை புலிகளின் முன்னணி அரசியல் பகுப்பாய்வாளர்களை விடவும், புலனாய்வாளர்களை விடவும் திறன் படைத்தவர்களாக இருக்க கூடும். அப்படி தங்கள் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப விடுதலை புலிகளிகளின் வியூகங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கும் களத்தின் அரசியல்/இராணூவ மேதைகள், யாழ்களம் போன்ற திறந்தவெளி கருத்துக்களங்களில் தங்கள் இராஜதந்திர/இராணூவ உத்திகளை வெளியிடாமல், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கிடைக்கப்பெறும் வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ விடுதலைபுலிகளுக்கே தெரிவித்து விடுவது சிறப்பாக இருக்கும்.

This post has been edited by vettri-vel: Today, 06:52 AM


--------------------
நூறாண்டு காலம் வாழ்க!!!
எங்கள் தேசியத் தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்கள்



Sooravali
Today, 07:13 AM
Post #13


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 32
Joined: 15-November 07
Member No.: 4,575



இலங்கையின் வேதனை அதன் அருகே இந்தியா, எமது வேதனை இந்தியாவும் இலங்கையும்... அதவிட வேதனை உலக மையத்தி நாமிருப்பது.

ஒறு பக்கம் அரக்கன் மறுபக்கம் கிறுக்கன்... யார் எது என்று நீகளே க்ண்டுபிடியுங்கோ.... கஸ்டமாயிருந்தா மாற்றி போட்டுப்பார்க்கலாம் பெரிய வித்தியாசம் இராது.


--------------------
ஆரசியல் சூறாவளி நாணுமல்ல நானென்று ஒன்றுமல்ல



vettri-vel
Today, 07:43 AM
Post #14


Advanced Member


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 469
Joined: 29-November 06
Member No.: 3,209



QUOTE(Sooravali @ Nov 26 2007, 07:13 AM)
ஒறு பக்கம் அரக்கன் மறுபக்கம் கிறுக்கன்... யார் எது என்று நீகளே க்ண்டுபிடியுங்கோ.... கஸ்டமாயிருந்தா மாற்றி போட்டுப்பார்க்கலாம் பெரிய வித்தியாசம் இராது.




--------------------
நூறாண்டு காலம் வாழ்க!!!
எங்கள் தேசியத் தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்கள்



kirubans
Today, 09:32 AM
Post #15


கிருபன்


Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 2,177
Joined: 6-March 04
From: இங்கிலாந்து
Member No.: 321



QUOTE (vettri-vel @ Nov 26 2007, 06:36 AM)
இங்கே சில கள நண்பர்கள் விடுதலை புலிகளின் முன்னணி அரசியல் பகுப்பாய்வாளர்களை விடவும், புலனாய்வாளர்களை விடவும் திறன் படைத்தவர்களாக இருக்க கூடும். அப்படி தங்கள் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப விடுதலை புலிகளிகளின் வியூகங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என நினைக்கும் களத்தின் அரசியல்/இராணூவ மேதைகள், யாழ்களம் போன்ற திறந்தவெளி கருத்துக்களங்களில் தங்கள் இராஜதந்திர/இராணூவ உத்திகளை வெளியிடாமல், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கிடைக்கப்பெறும் வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ விடுதலைபுலிகளுக்கே தெரிவித்து விடுவது சிறப்பாக இருக்கும்.


சரியான அறிவுரை..

அக்கறையுள்ளவர்கள் சத்தம் போடாமல் தங்கள் கடமைகளைச் செய்துகொள்ளுகிறார்கள்.

எனினும் தங்கள் சிந்தனைகளில் உள்ள குறைபாடுகளை உணர்ந்தவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.. யாழ் களம் போன்ற பொதுவான இடங்களில் எழுதித் தள்ளிவிட்டு தம் கடமை முடிந்தது என்று மறுவேலை (தங்களின் பிழைப்பைத்தான்) பார்க்கப் போய்விடுவார்கள்.


--------------------
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
http://kirubans.blogspot.com
---------------------------------------------------------------------------------------------------------

நன்றி யாழ்.கம்

ஆறு

Labels: , ,

Friday, November 2, 2007

மீளாத்துயில் கொள்ளும் அண்ணன்களுக்கு ஒர் சமானியனின் வீரவணக்கம்

ஈழத்தமிழர்கள் அனைவரும் ஓரு துன்பச் செய்தியை கேட்டுக்கொண்டே வேலைக்குச் சென்றோம். பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் இன்று காலை 6 மணிக்கு வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவருடன் பல வீரர்களையும் இன்று இழந்துவிட்டோம். இவர்களுடைய இழப்பு புலிகளுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. நான் இவரை நேரில் சந்தக்காவிட்டாலும் 90 நடுப்பகுதிகளில் கே.கே.ஸ் றோட்டில் அவருடைய கறுப்பு பயிரொவில் போவதை பார்த்திருக்கிறேன், அப்பொழுது அவர் அரசியல் பொறுப்பாளர் என்று மட்டும் தெரியும் அனால் அவர் எவ்வளவு பெரியவர் என்று பின்னர்தான் தெரியும். எப்ப கே.கே.ஸ் றோட்டால் சென்றாலும் சிரித்த முகத்துடன்தான் கண்ட ஞாபகம். எங்களுக்கு எப்பவும் கைகாட்டிக்கொண்டுதான் செல்வார். அப்பொழுது எனக்கு 8-10 வயது தான், அதனால் கைகாட்டிவிட்டுச் சென்றஅடுத்தநாள் பள்ளிக்கூடம்சென்று தமிழ்செல்வன் என்னைமட்டும் பார்த்து கைகாட்டிவிட்டுச் சென்றதாக நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு. அவர் யாரைப் பார்த்து கைகாட்டினார் என்று சண்டைபோட்டிருக்கின்றோம். அந்த கால கட்டத்தில் பிரபாகரனுக்குப்பிறகு தெரிந்தவர் என்றால் அவர் மட்டுமே. இன்று அவர் இறந்த செய்தி கேட்டதுக் என்னையறியாமலே கண்ணீர் வந்துவிட்டது. கடந்த பத்து வருடத்திலே நான் அழுதது இரண்டுமுறைதான். இன்று ஒன்று மற்றயது முன்று மாதத்திற்கு முன்னர் எனது நண்பனை கூலிப்படைகள் அவனது வீட்டுக்கு முன்வைத்து கொன்றபோது.

நாங்கள் ஓன்றை மட்டும் மறக்கக்கூடாது, சிங்கள வான்படையால் இவர் சாகவில்லை, ஓரு துரோகி இவரது இடத்தை காட்டிக்கொடுத்ததால்தான் இவர் மற்றும் சக போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு என்னிடம் ஆணித்தரமான ஆதாரம் இல்லை ஆனால் இவரின் இடத்தை யராவது காட்டிக்கொடுத்திருந்தால் மட்டுமே சிங்களப்படையால் குண்டு போட்டிருக்கமுடியுமே. இதைவைத்துக்கொண்டு சிங்களவர்கள் தாங்கள் இன்னமும் பலத்துடன் இருப்பதுபோல்காட்ட முயற்சிப்பார்கள், அனால் எல்லாளன் நடவடிக்கையோடு அவர்களது வான்படை துப்பற்றுப்போய்விட்டது. தமிழ்செல்வன் என்ற மாவீரன் ஓரு துரோகியால்தான் கொல்லப்பட்டார்.

இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும். அனால் எனது அவா என்னவென்றால் சிறிதாக கொடுக்காமல் யாழ் குடாவில் முடங்கியுள்ள படையினரை அடித்தால்தான் திருந்துவர். யாழ் குடாவில் உள்ள படையினர் அனைவரும் அடிக்கின்ற அடியில் கொழும்புக்கு கப்பலிலல்ல பெட்டிகளில்தான் செல்லவேண்டும். எனக்கும் தெரியும் ஓருஉயிர் எவ்வளவு உன்னதமானது என்று அனால் யுத்தம் முடியவேண்டுமேன்றால் சிங்களவர்களுக்கும் அதன் கொடுரம் தெரியவேண்டும். நானும் எனது தாகப்பனார் உட்பட பலரை இழந்திருக்கின்றேன் அனால் யுத்தத்தின் வலி அவர்களுக்கும் தெரியவேண்டும். இனி அடிக்கின்ற அடியில் அவர்கள் ஓருபோதும் எழுந்திருக்கக்கூடாது, அப்பொழுதுதான் தெரியும் தமிழன் என்றால் யாரெண்டு.

எமக்காக, எம் சந்ததிக்காக உயிரைவிட்ட இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

தமிழிழம் மலரும் அதுவரை இவர்கள் கொஞ்சம் உறங்கட்டும்.

நன்றி
ஆறு

Labels: ,

Wednesday, October 24, 2007

இரணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்




நன்றி யாழ்.காம், வலைஞன் மற்றும் இவள்.


உயிரை துச்சமென மதித்துப் போராடி உயிரிழந்த மாவீரர்களின் உடல்களுக்கு தகுந்த மரியாதை குடுக்கத்தவறிய வலுவிளந்த சிங்கள அரசஇயந்திரம் இன்னும் வெற்றி பெறுவோம் என்ற நினைப்பில் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றது. மாவீரர்களின் உடல்களை அலங்கோலப்படுத்திய சிங்கள அரசு விரைவில் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.

இதுவரை ஓரு நாடும் தாக்குதலுக்கு எதிர்ப்புச் சொல்லவில்லை. என்றாலும் 21 கரும்புலிகள் இறந்தது மிகவும் கவலைக்குரியவிடையம்.

ஆறு

Labels:

Proof is a Proof



முன்னாள் கனாடாவின் பிரதமர் Jean Chrétienனின் famous quote.

Labels:

நாம் அனைவரும் பார்க்க வோண்டிய படம்

நண்பர் மாறன் அவர்களின் பதிவில் பார்த்தது. அதை இங்கையும் போடுறன், அங்க விட்டக்கள் இங்கை பாருங்கோ.



மாறனின் பதிவு

Labels: ,

Tuesday, September 25, 2007

குடியுருமை

குடியுருமை என்றவுடன் ஞாபகம் வருவது நாங்கள் வாழ்ந்து வரும் நாடு அல்லது
எமது தாய் நாடு. இந்த வட்டத்திற்குமேல் ஒருவரும் குடியுருமையை பற்றி
யோசிப்பதில்லை அதற்கு அதிக காரணமும் இல்லை. சற்றே யோசித்துப்பார்த்தால்
உலகத்தில் உள்ள அதிக பிரச்சனைகளுக்கு இந்த குடியுருமைதான் காரணம்.
ஈழத்தில் தமிழ் மக்களுக்கு சம குடியுருமை கொடுத்திருந்தால் ஈழப்போராட்டமே
நடக்காது இன்னும் உலகத்தில் பல பிரச்சனைகள் நடந்திருக்காது மற்றும்
நடக்காமலிருக்கும்.

சற்றே தொலைநோக்கு பார்வையுடன் பார்த்தால் இந்தக் குடியுருமை பிரச்சனை
வேகமாக தீர்கப்படவேண்டிய விடயம் என்று புலப்படும். உலகத்திலுள்ள அனைவரும் ஓரே குடியுருமை வைத்திருந்தால் பல பிரச்சனைகளை தீர்க்கப்படும். ஓவ்வொரு நாடும் சுயநலத்துடன் செயல்படுவதனால்தான் பிரச்சனை. ஆனால் நாம்
எதிர்காலத்தில் எமது நாடு என்ற சிறு வட்டத்திலிருந்து எமது பூமி என்ற
பரந்த வட்டத்திற்கு வரவேண்டும், அப்படி வந்தால்தான் மனிதர்கள் இந்த
பூமியிலிருந்து அழிந்து போகாமல் இருக்கமுடியும். மனித இனம்
கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கின்றது, ஆகையால் நாம்
அழிந்துபோகாமல் இருப்பதற்கு விஞ்ஞானத்தை நம்பவேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுருக்கின்றோம். நான் சொல்லுவது எமது வாழ்க்கை தரத்தை
உயர்த்துவது மட்டுமல்ல ஏன்னென்றால் உலகத்தின் மக்கள் தொகை 6 பில்லியனை
தாண்டிவிட்டது ஆகையால் நாம் வசிப்பதற்கு வேறு இடங்களை பார்க்க
நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

வேறு இடங்கள் என்று குறிப்பிட்டது வேற்று கிரகங்களயாகும். இது கேட்பதற்கு விநோதாமாக தெரியலாம் ஆனால் இதுதான் நிஜம் ஏனென்றால் பூமியால் மக்களை தாங்கமுடியாமல்போகும் காலம் வெகுதூரத்திலில்லை. ஏற்கனவே பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது, இதன் காரணமாக பனிக்கட்டிகள் கரைந்து கொண்டிருக்கின்றன. பல நகரங்கள் தண்ணீருக்கள் முழ்கும் அபாயத்தில் உள்ளன. மனித இனம் கடந்த 30,000 வருடங்களுக்குமேலாக முன்னேறவில்லை. இதன்படி பார்த்தால் மனிதர்களால் புதிய சுழ்நிலைக்கு வேகமாக மாறமுடியாது. ஆகையால் வேற்று கிரகங்களை நாடிபோகவேண்டிய கட்டாயத்திலுள்ளோம். இதற்கரிய வேலைகளில் விஞ்ஞானைகளும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். பிரச்சனை என்னவென்றால், ஓவ்வொரு நாடும் தன்னந்தனியாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றன, இதன்காரணமாக ஆராய்ச்சி வேகமாக செல்லமுடியாமல் இருக்கின்றது. இந்த secrecyக்கு முக்கிய காரணம், ஓவ்வொரு நாடும் தான்தான் எல்லாவற்றிலும் முதலிடத்திலிருக்கவேண்டும் என்ற சுயநலம். இதன் காரணமகத்தான் ஓவ்வொரு நாடும் சந்திர மண்டலத்திற்கு செல்லவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்று நிற்கின்றன. இதன்காரணமாக ஏராளமான பணம் விரயமாகின்றது. ஆனால் பூமியில் ஓரு மத்திய அரசாங்கம் இருக்குமானால் விஞ்ஞானம் மிக வேகமாக வளரும், இது மட்டுமல்ல ஓரு மத்திய அரசாங்கம் இருந்தால் எந்தப் பிரச்சனையையும் பேசி தீர்ப்பதற்கு ஓரு மேடையை அதனால் உருவாக்கமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையை ஓரு எடுத்துக்காட்டாக பார்க்கலமேஓழிய அதை நிச்சயமாக பின்பற்றக்கூடாது. எல்லா நாடுகளுடைய தேவைகளையும் பிரதிபலிக்கக்கூடியதாக அமையவேண்டும். இப்பொழுதுள்ள நிலமையில் இது சாத்தியப்படாத ஓன்றாக தெரிந்தாலும், நாட்டு மக்களுக்கும் பதவியிலுள்ளவர்களுக்கும் தொலைநோக்கு பார்வையுட்ன் செயல்பட்டால் இது நிச்சயமானது.

நன்றி
ஆறு

Labels: ,

Tuesday, August 28, 2007

யுத்த நிறுத்தத்திற்கு முன் யாழ்பாணமும் ராணுவமும்...

(நான் அடுத்ததாக சாவகச்சேரியில் கண்ட மற்றும் எற்பட்ட அனுபவங்களை எழுதுவதாக இருந்தேன். ஆனால் நண்பர் செ.குணரத்தினம் யாழ் மக்கள் யுத்தநிறுத்தம் வரை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஒரளவு நிம்மதியாக இருந்ததாக சொன்னார். இதுதான் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நான் பார்த்த யாழ்பாணம்.)

யாழ் பாதை திறந்த இரண்டொரு மாதத்தில் அனேக மக்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். பாடசாலை தொடங்க ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வருடம் மிகவும் முக்கியமான வருடம், ஏன் என்றால் இலங்கையில் 5ஆம் வகுப்பில் ஸ்காலர்ஷப் ரெஸ்ற் நடப்பது வழக்கம். ஆனால் இடம்பெயர்வால் 95ஆம் ஆண்டு நடக்கவேண்டிய பரீட்சை நடக்கவில்லை அதனால் 96ஆம் ஆண்டு இரண்டு பரீட்சைகளையும் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த ஸ்காலர்ஷப் பரீட்சை வந்து எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த கண்டத்தை கடந்தால் அடுத்து 10ஆம் வகுப்பில் வரும் ஓ.ல் பரீட்சைதான். கிட்டத்தட்ட ஆறு மாதம் படிப்பில்லாமல் இருந்த நாங்கள் இரண்டு மாதத்தில் பரீட்சைக்கு தயாரகவேண்டும். அந்த நேரத்தில் அடிக்கடி சுற்றிவளைப்பு நடக்கும். அப்படி நடந்தால் அந்த நாள் முழுக்க வீணாகிவிடும்.

சுற்றி வளைப்பு நேரத்தில் கொஞ்சம் வயது வந்தவர்கள் வீட்டுக்குவெளியே வரமாட்டார்கள். வயது குறைந்த எங்களை பிடித்தால் ஐடியை பார்த்துவிட்டு திருப்பி அனுப்புவான் அதனால் பெற்றோர்கள் எங்களை கொஞ்சம் பயமில்லாமல் அனுப்புவார்கள். இதுவும் ஆண்பிள்ளைகளை மட்டுந்தான். சுற்றி வளைப்பு நேரத்தில் 5 வயது பெண்பிள்ளையை கூட வீட்டு வாசல் படியை தாண்ட விடமாட்டார்கள். சுற்றி வளைப்பின்போது வயது கூடியவர்களை கூட்டிக்கொண்டுபோய் தலையாட்டிக்கு காட்டிவிட்டு அனுப்பிவிடுவார்கள் ஆனால் சில நேரத்தில் சும்மா சிலபேரை நிற்பாட்டிவைத்து அடித்துவிட்டு அனுப்புவான். அடிவாங்கிய ஓருவருக்கும் இயக்கத்துடன் தொடர்பு இருந்திருக்காது. காலப்போக்கில் இதுவெல்லாம் அன்றாடப் பழக்கமாகிவுட்டது.

இதே காலப்பகுதியில் யாழ் நகரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. யாழ் நகரத்துக்குள் வரும் எவரும் செக் பொயின்ற் தாண்டித்தான் போகவேண்டும். எனக்கு பழக்கமானது தட்டாதெரு செக் பொயின்ற் (யாழ் நகரம் செல்லும்போது) மற்றும் கலப்பிட்டி செக் பொயின்ற் (வீடு வரும்போது). இது இரண்டு செக் பொயின்ற்களும் ஓன்வே செக் பொயின்ற்கள். இதில் நாங்கள் பட்ட கஸ்ரம் கொஞ்ச நஞ்சமில்லை. செக் பொயின்ரிலிருந்து 200 மீற்றர் தொலைவிலிருந்தே சைக்கிளிலிருந்து இறங்கி நடக்கவேண்டும், சின்னக்குழந்தையிலிருந்து நடக்கமுடியாமலிருக்கும் வயது போனவர்கள்வரை, வருத்தக்காரர்களுக்கும் இதே கதிதான். நடக்கும் சிறிய பாதையோ முள்ளுக்கம்பிகளால் கட்டப்பட்டிருக்கும். எங்களது மண்ணிலேயே எங்களை ஏதோ குற்றமிளைத்தவர்கள்போல் நடத்தினார்கள். செக் பொயின்ரில் வைத்து இரண்டு ஐ.டிகளையும் பார்த்து பாடசாலை பையை பார்த்துத்தான் அனுப்புவான். இவர்களின் நினைப்பு என்னவோ புலிகள் செக் பொயின்ற்களால்தான் யாழ் நகரத்துக்கு செல்கிறார்கள் என்பது. கிட்டத்தட்ட 11 வயதுக்குமேற்பட்ட அனைவருக்குமே 2 ஐ.டிக்கள் இருந்தன. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் வடக்கில் வசிப்பதற்கான ஐ.டிக்கள். மற்றவர்களுக்கு தேசிய வடக்கில் வசிப்பதற்கான ஐ.டிக்கள். யாரும் வெளியில் செல்லும்போது வீட்டிலுள்ளவர்கள் மறக்காமல் சொல்லுவது ' ஐ.டிக்களை மறக்கால் எடுத்துக்கொண்டுபோங்கோ'. இரண்டு வீடுதள்ளி விளையாடப்போகும்போது கூட ஐ.டிக்களை எடுத்துச் சென்றிருக்கின்றோம்.

6 மணிக்குள் ஊரே அடங்கிவிடும் 6 மணிக்குப்பின் வெளியே சென்றால் அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதமில்லை. இப்படித்தான் யுத்த நிறுத்தத்தின் முன்னர் அங்கு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. புலிகள் ஓரு போதும் புலிகள் யாழ்குடாவை விட்டுச் செல்லவில்லை. இது தெரியாமல் ஏதோ யுத்த நிறுத்தத்தின் பின்னர்தான் புலிகள் யாழ்குடாவுக்கு வாந்ததாகவும் அதனால்தான் ராணுவம் மக்களை கொல்வதாகவும் யாரும் நினைத்தால் அது உங்களின் அறியாமையைதான் காட்டுகிறது.


நன்றி
ஆறு

Labels: